» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு: முன் ஜாமீன் கோரி கஸ்தூரி மனு தாக்கல்!
திங்கள் 11, நவம்பர் 2024 12:51:17 PM (IST)
தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தனிப் படை போலீசார் தேடி வரும் நிலையில், நடிகை கஸ்தூரி முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதேபோல், அகில இந்திய தெலுங்கு சம்மேளன அமைப்பு சார்பில் நடிகை கஸ்தூரி மீது அளித்த புகாரின் அடிப்படையில், கலவரத்தை தூண்டுதல் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ், சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் விசாரணைக்கு வரும்படி, சம்மன் வழங்கச் சென்றபோது கஸ்தூரியின் வீடு பூட்டியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். கஸ்தூரியின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால், நடிகை கஸ்தூரி தலைமறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
கஸ்தூரியை தனிப்படை போலீசார் இரண்டாவது நாளாக தேடி வரும் நிலையில், அவர் ஐதராபாத்திற்கு அவ்வப்போது சென்று வந்ததால் அங்கு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கஸ்தூரி மனு தாக்கல் செய்துள்ளார். உள்நோக்கத்தோடு தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கஸ்தூரி தனது முன் ஜாமீன் மனுவில் குறிப்பிட்டுள்ளார். கஸ்தூரி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நாளை விசாரணைக்கு வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காலனி என்ற சொல் பொது புழக்கத்தில் இருந்து நீக்கப்படும்: பேரவையில் முதல்வர் அறிவிப்பு
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:58:01 AM (IST)

முதியவர்கள் சாலையை கடக்க உதவும் பெண் காவலர்கள் : பொதுமக்கள் பாராட்டு!
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:40:37 AM (IST)

குமரி மாவட்டத்தில் மே 1ம் தேதி மதுக்கடைகளை மூட ஆட்சியர் அழகுமீனா உத்தரவு!
திங்கள் 28, ஏப்ரல் 2025 5:01:42 PM (IST)

நன்கு பயின்று பெற்றோரின் கனவை நிறைவேற்ற வேண்டும்: மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை
திங்கள் 28, ஏப்ரல் 2025 4:49:22 PM (IST)

பிளஸ்-1 மாணவனை குத்திக்கொன்ற கல்லூரி மாணவன் : குமரி அருகே பயங்கரம்!
திங்கள் 28, ஏப்ரல் 2025 12:54:30 PM (IST)

ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம்: ஆட்சியர் சுகுமார் தொடங்கி வைத்தார்!
திங்கள் 28, ஏப்ரல் 2025 12:35:26 PM (IST)
