» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பண மோசடி வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் : கரூர் நீதிமன்றம் உத்தரவு

புதன் 24, ஜூலை 2024 5:30:20 PM (IST)

பண மோசடி வழக்கில், யூ டியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தேனி மாவட்டத்தில் தங்கியிருந்த பிரபல யூ-டியுபர் சவுக்கு சங்கர், தனது அறையில் 2.5 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6வது முறையாக ஜூலை 30ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதற்கிடையே, பண மோசடி வழக்கில் இன்று(ஜூலை 24) சவுக்கு சங்கருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. கரூர் குற்றவியல் நீதிமன்றம் இந்த ஜாமின் உத்தரவை வழங்கி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital





Thoothukudi Business Directory