» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சொத்துக்காக கொடூரமாக தாக்கிய மகன் - தந்தை உயிரிழப்பு - போலீஸ் விசாரணை!!

வெள்ளி 26, ஏப்ரல் 2024 4:22:36 PM (IST)

பெரம்பலூர் அருகே சொத்துக்காக மகன் கண்மூடித்தனமாக தாக்கியதில் காயம் அடைந்த தந்தை, சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் திடீரென உயிரிழந்தார்.

பெரம்பலூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அரிசி ஆலை உரிமையாளர் குழந்தைவேலு. அவருக்கும் அவரது மகன் சக்திவேலுக்கும் இடையே சொத்து தகராறில் கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சக்திவேல், சோபாவில் அமர்ந்திருந்த தனது தந்தையை கொலைசெய்யும் நோக்கில் தாக்கியுள்ளார்.

இதையடுத்து சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், குழந்தைவேலுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய குழந்தைவேலு கடந்த 18-ம் தேதி மது அருந்தி விட்டு உறங்கச் சென்றுள்ளார். இந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, கடந்த பிப்ரவரி மாதம் குழந்தைவேலு தாக்கப்பட்ட சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதியவர் மாரடைப்பால்தான் உயிரிழந்ததாக கூறி மருத்துவமனை நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சிசிடிவி காட்சியை வைத்து விசாரித்து வந்த போலீசார், ஆபாசமாக பேசுதல், கொடுங்காயம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் சக்திவேல் மீது வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory