» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மனைவி, மாமியாரை தாக்கியவர் கைது

புதன் 10, ஏப்ரல் 2024 9:54:50 AM (IST)

சிவகிரி அருகே குடும்ப பிரச்சனையில் மனைவி, மாமியாரை தாக்கியவரை போலீசார்  கைது  செய்தனர்.

சிவகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொத்தடப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் கணேசன் மகன்  அய்யனார் (27) .  இவர் குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல்தனது மனைவியிடம் பிரச்சனை செய்து வந்துள்ளார். இதனால் அவரது மனைவி வாசுகி பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் ஊர் பெரியவர்கள் கூறியதால் மீண்டும் அய்யனாருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் அய்யனார் நேற்று முன்தினம்  மீண்டும் குடித்துவிட்டு வந்து வாசுகியிடம் பிரச்சனை செய்தால் வாசுகி அவரது தாயின் வீட்டிற்கு சென்றுள்ளார்.அங்கு சென்ற அய்யனார் அசிங்கமாக பேசி பிரச்சனை செய்து வாசுகி மற்றும் அவரது தாயை தாக்கி காயம் ஏற்படுத்தி மிரட்டல் விடுத்துள்ளார்.  இதுகுறித்து வாசுகி கொடுத்த புகாரின் பேரில் சிவகிரி  சார்புஆய்வாளர் வரதராஜன் வழக்கு பதிவு செய்து   அய்யனாரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார்..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory