» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் 18 -பேர் மனுதாக்கல்.
வியாழன் 28, மார்ச் 2024 10:06:21 AM (IST)
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் மொத்தம் 18பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜயதாரணி, இவர் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, தேர்தல் ஆணையம் விளவங்கோடு தொகுதி காலியானதாக அறிவித்தது.
இதை அடுத்து பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் நேற்று நிறைவு பெற்றது. மொத்தம் 18பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இது குறித்து விவரம் வருமாறு:
1. மோகன் குமார் (சுயேட்சை),
2. ராணி (அதிமுக),
3. விஜயகுமார் (சுயேட்சை),
4. ஷாஜின் (சுயேட்சை),
5. ஓம் பிரகாஷ் (49) இந்து மகா சபா,
6. ரசல்சி(38) (சுயேட்சை),
7. ஜெமினி (39 ) நாம் தமிழர்)
8. மரிய ஸ்டெல்லா (நாம் தமிழர் மாற்று)
9. கண்ணன் (37 ) (சி பி எம் எல் ரெட் ஸ்டார்)
10. தாரகை காட்பட் (48) காங்கிரஸ்
11. ஜஸ்டின் (43)(சுயேட்சை)
12. நந்தினி(42) பாஜக
13. சுகுமாரன் (54) பாஜக மாற்று
14. எட்வின் ராஜகுமார்(அதிமுக) மாற்று
15.சுனில் (தமிழ்நாடு இளைஞர்கள் )
16. ராஜேஷ்(சுயேட்சை)
17. பழவார் தங்கப்பன் (75) தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சி,
18. அரோமன் ஜார்ஜ் (காங்கிரஸ் மாற்று)
ஆகியோர் மனதாக்கல் செய்தனர். பாஜக மற்றும் திமுகவினர் அதிக அளவில் தொண்டர்களுடன் வந்து ஆட்டம் பாட்டம் கோஷங்களுடன் மனுதாக்கல் செய்தனர்.