» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குளிர்பானத்தில் விஷம் கலந்து காதலனை கொலை செய்த வழக்கு கிரீஷ்மாவுக்கு ஜாமீன் மறுப்பு!
சனி 3, ஜூன் 2023 3:27:51 PM (IST)

குளிர்பானத்தில் விஷம் கலந்து காதலனை கொலை செய்த வழக்கில் காதலி கிரீஷ்மாவின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள ராமவர்மன்சிறை பகுதியை சேர்ந்தவர் கிரீஷ்மா (22). இவர் குமரி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்த கேரள மாநிலம் பாறசாலையை சேர்ந்த ஷாரோன் என்பவரை காதலித்துள்ளார். காதலியுடன், திற்பரப்பு, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்ற ஷாரோன், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திடீர் உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், அதே மாதம் 25-ந்தேதி ஷாரோன் பரிதாபமாக இறந்தார். தனது மகன் சாவுக்கு, கிரீஷ்மா தான் காரணம் என, ஷாரோனின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். கேரள மாநில குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், காதலன் ஷாரோனுக்கு, காதலி கிரீஷ்மா, குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்திருப்பது தெரிய வந்தது.
இது தொடர்பாக கிரீஷ்மா கைது செய்யப்பட்டார். மேலும் இந்த சம்பவத்திற்கு உதவியாக செயல்பட்டதாக, கிரீஷ்மாவின் தாய் சிந்து, தாய்மாமா நிர்மல் குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு நெய்யாற்றின்கரை கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர்.
இதனை தொடர்ந்து தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கைது செய்யப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த கோர்ட்டு, சிந்து மற்றும் நிர்மல்குமாருக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால் கிரீஷ்மாவுக்கு ஜாமீன் வழங்கவில்லை. இதனால், அவர் கடந்த 7 மாதங்களாக திருவனந்தபுரம் அட்ட குளங்கரை பெண்கள் சிறையிலேயே உள்ளார்.
இந்த நிலையில், ஜாமீன் கேட்டு நெய்யாற்றின்கரை நீதிமன்றத்தில் கிரீஷ்மா மீண்டும் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி வித்யாதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது போலீசார், கிரீஷ்மாவுக்கு ஜாமீன் வழங்கினால், சாட்சியங்களை கலைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கிரீஷ்மாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் பூலித்தேவர், ஒண்டி வீரன் நினைவிடங்களில் ஆளுநர் மரியாதை
வெள்ளி 29, செப்டம்பர் 2023 5:34:28 PM (IST)

குமரி மாவட்டத்தில் அக்.2ம் தேதி கிராமசபைக் கூட்டம் ஆட்சியர் தகவல்!!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 5:32:44 PM (IST)

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் மறைவு : முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி
வெள்ளி 29, செப்டம்பர் 2023 4:09:34 PM (IST)

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு: 18 பேருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க உத்தரவு
வெள்ளி 29, செப்டம்பர் 2023 1:21:55 PM (IST)

பாரதத்தின் உந்து சக்தி விவசாயிகள்தான்: குற்றாலத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
வியாழன் 28, செப்டம்பர் 2023 8:31:11 PM (IST)

திருவள்ளுவர் மண்ணில் தாமரை மலரும்: பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி
வியாழன் 28, செப்டம்பர் 2023 5:40:59 PM (IST)
