» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சீருடையில் வரும் மாணவர்களை அனுமதிக்க வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு!

புதன் 31, மே 2023 12:47:25 PM (IST)

பள்ளிச் சீருடையில் வரும் மாணவர்களை பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய நடத்துனர்கள் அனுமதிக்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இப்பயணத்திற்கு மாணவர்கள் தங்களின் அடையாள அட்டையை பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், அடுத்த வாரம் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், அடையாள அட்டை தருவதற்கு காலதாமதம் ஏற்படும் என்பதால், சீருடையில் வரும் மாணவர்களை பேருந்துகளில் அனுமதிக்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், சீருடையில் வரும் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டால் நடத்துனர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory