» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இந்து மகாசபா தலைவர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: கார் கண்ணாடிகள் உடைப்பு

வியாழன் 18, ஆகஸ்ட் 2022 11:33:42 AM (IST)



கடையம் அருகே இந்து மகாசபா தென்மண்டல தலைவர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பாப்பான்குளத்தை அடுத்த மடவார்விளாகத்தைச் சேர்ந்தவர் இசக்கிராஜா (46). இவர் அகில பாரத இந்து மகாசபா தென்மண்டல தலைவராகவும், தென்காசி மாவட்ட தலைவராகவும் உள்ளார். இரவில் அவரது வீட்டின் வெளியே திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி சென்று பார்த்தனர். நாட்டு வெடிகுண்டு வீச்சு அப்போது வீட்டின் வளாகத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறிய நிலையில் கிடந்தது. 

அங்கு நிறுத்தப்பட்டு இருந்த காரின் முன்பக்க மற்றும் பின்பக்க கண்ணாடிகள் உடைத்து நொறுக்கப்பட்டு கிடந்தன. அங்குள்ள கண்காணிப்பு கேமராவும் சேதப்படுத்தப்பட்டு இருந்தது. காரின் கண்ணாடிகளை மர்மநபர்கள் உடைத்துவிட்டு, நாட்டு வெடிகுண்டையும் வீசிச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  

மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  கிருஷ்ணராஜ், ஆலங்குளம் துணை கண்காணிப்பாளர் பொன்னரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடங்கிய ஹார்டு டிஸ்க்கை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.  இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அங்கு அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory