» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீச்சு : 5 பேர் கைது
சனி 13, ஆகஸ்ட் 2022 4:55:36 PM (IST)
மதுரையில் நிதியமைச்சர் பி.டி.ஆர்., பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் லட்சுமணன் உடல் விமானம் மூலம் இன்று மதியம் 12.15 மணிக்கு மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு நிதியமைச்சர் பி.டிஆர்.பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவர் புறப்பட்டுச் சென்றபோது, அவரது காரின் மீது காலணி வீசப்பட்டது.
மதுரை விமான நிலைய நுழைவு வாயிலில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை அவனியாபுரம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதானவர்களில் 3 பேர் திருச்சி, 2 பேர் மதுரையை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அரசின் சார்பில் அஞ்சலி செலுத்திய பிறகே பா.ஜ.கவினர் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கூறியதால் பிரச்சனை ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.