» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சாலை தடுப்புச்சுவரில் பைக் மோதியதில் வாலிபர் பலி: மற்றொருவர் படுகாயம்

வெள்ளி 21, ஜனவரி 2022 8:15:30 PM (IST)

வாசுதேவநல்லூர் அருகே பைக் விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே சிந்தாமணிப் பேரி புதூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மல்லையா மகன் பெருமாள்ராஜ் (30). இவரும் அதே ஊரைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் குமார் (45) என்பவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை குமார் ஓட்டியுள்ளார். பைக் ஒத்தக்கடை விலக்கு பகுதியில் வந்தபோது சாலை மத்தியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவரில் பைக் மோதியதில் பெருமாள்ராஜ் சம்பவ இடத்தில் இறந்துவிட்டார்,

படுகாயம் அடைந்த குமார் சிவகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின் அவர் புளியங்குடி அரசு மருத்துவமனையிலும் அதன்பின் அவர் தென்காசி அரசு மருத்துவமனையிலும் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. உதவி ஆய்வாளர் முருகேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory