» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சேப்பாக்கம் தொகுதியில் வெற்றியை எதிர்த்து வழக்கு: உதயநிதி பதிலளிக்க உத்தரவு
வெள்ளி 17, செப்டம்பர் 2021 5:25:09 PM (IST)
சேப்பாக்கம் தொகுதியில் வெற்றிபெற்றதை எதிர்த்த வழக்கில் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட வெற்றி பெற்ற அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து, தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான எம்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்துள்ளார். இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கில் தேர்தல் ஆணையம், உதயநிதி 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.