» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆட்டோ டிரைவர் கொலை: வக்கீலுக்கு போலீஸ் வலை

வெள்ளி 17, செப்டம்பர் 2021 11:44:22 AM (IST)

தென்காசி அருகே ஆட்டோ டிரைவரை கொலை தொடர்பாக  வக்கீலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தென்காசி அருகே உள்ள அழகப்பபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ராமகிருஷ்ணன் (41), ஆட்டோ டிரைவர். இவரது உறவினர் அதே ஊரைச் சேர்ந்த சதீஷ்குமார். இவர் வக்கீலாக உள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று இரவு ராமகிருஷ்ணனின் வீட்டின் முன்பு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

தகராறு முற்றியதில் சதீஷ்குமார், ராமகிருஷ்ணனை கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் ராமகிருஷ்ணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் சதீஷ்குமார் அவரை காலால் மிதித்ததாகவும் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த ராமகிருஷ்ணனை செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.  பின்னர் அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக   தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். ஆனால் வரும் வழியில் ராமகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார்.

இந்த கொலை குறித்து தகவல் அறிந்த தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். ராமகிருஷ்ணனின் உடல் பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில்  வைக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வக்கீல் சதீஷ்குமாரை  வலைவீசி தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory