» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டி பள்ளிக்கு ரூ.70 ஆயிரத்தில் புதிய இரும்பு வாயிற்கதவு: ரோட்டரி சங்கம் வழங்கல்!

திங்கள் 17, ஆகஸ்ட் 2026 10:40:41 AM (IST)

KvpsChoolGate.jpg

கோவில்பட்டி பங்களாதெரு நகராட்சி தொடக்கப் பள்ளியில் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய இரும்பு வாயிற்கதவு திறப்பு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பங்களாதெரு நகராட்சி தொடக்கப் பள்ளி நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்று, கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளியின் முகப்பில் ரூ. 70 ஆயிரம் மதிப்பில் புதிய இரும்பு வாயிற்கதவு அமைக்கப்பட்டது. விழாவிற்கு கோவில்பட்டி ரோட்டரி சங்கத் தலைவர் முத்து முருகன் தலைமை வகித்தார். 

மாவட்ட முன்னாள் உதவி ஆளுநர் எம்.எஸ்.எஸ்.வி. பாபு முன்னிலை வகிக்க, ரோட்டரி சங்கச் செயலாளர் ரமேஷ் குமார் அனைவரையும் வரவேற்றார்.ரோட்டரி மாவட்ட கிளப் சர்வீஸ் சேர்மன் விநாயகாரமேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு புதிய வாயிற்கதவினைத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் சீனிவாசன், ராஜ்குமார், தாமோதர கண்ணன், மாரியப்பன், நடராஜன், சரவணன், மணிகண்டன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவில் பள்ளித் தலைமை ஆசிரியை ராஜசரஸ்வதி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory