» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் நெய்தல் கலைத் திருவிழா நிறைவு : கனிமொழி எம்பி நெகிழ்ச்சி!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 10:12:56 AM (IST)

தூத்துக்குடியில் நெய்தல் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. விழாவை வெற்றி பெறச் செய்த பொதுமக்கள், காவல்துறையினர், அரசுத் துறையினர் மற்றும் ஊடகங்களுக்கு நன்றி" என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மைதானத்தில் கடந்த 14-ஆம் தேதி தொடங்கிய 5-வது 'நெய்தல்' கலைத் திருவிழா நேற்றிரவு (ஆகஸ்ட் 16) கோலாகலமாக நிறைவுற்றது.திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி. முன்னெடுப்பில் நடைபெற்ற இந்த விழாவில், கடந்த ஆண்டு புத்தகத் திருவிழாவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுத் தொகைகளும், வ.உ.சி கல்லூரி முதல்வர் வீரபாகு, நபார்டு வங்கி அதிகாரிகள் சுரேஷ் ராமலிங்கம், சதாம் உசேன் ஆகியோருக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்பி, வடக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கருணாநிதி எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்கக் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து வந்திருந்த நாட்டுப்புறக் கலைஞர் பிரசாந்த் சனிக்கிழமை உடல்நலக்குறைவால் மறைந்ததை ஒட்டி, நிறைவு விழாவில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
விழாவில் கனிமொழி எம்.பி. பேசுகையில் "தூத்துக்குடியில் நெய்தல் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. புதிய கலைஞர்களின் திறமைக்கு மக்கள் அளிக்கும் கைதட்டல் அவர்களுக்குப் மிகப்பெரிய உற்சாக மருந்து. இந்த விழாவை வெற்றி பெறச் செய்த பொதுமக்கள், காவல்துறையினர், அரசுத் துறையினர் மற்றும் ஊடகங்களுக்கு நன்றி" என்றார்.
முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், "மண்ணின் கலைகள் அழிந்துவிடக் கூடாது, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனிமொழி எம்.பி.யின் நோக்கம் நிறைவேறி வருகிறது. அனைத்துத் தரப்பு மக்களும் மன மகிழ்ச்சியோடு இதில் பங்கேற்றுள்ளனர்" என்றார்.
மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்"தூத்துக்குடியையும் கடலையும் எப்படிப் பிரிக்க முடியாதோ, அதேபோல் நெய்தல் நிகழ்ச்சியையும் மக்களையும் பிரிக்க முடியாது. 2 வயதுக் குழந்தை முதல் 80 வயது முதியவர்கள் வரை குடும்பத்தோடு கலந்துகொண்டு மகிழ்ந்ததைக் காண முடிந்தது" என்றார்.
தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்துகொண்டனர். கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பறையாட்டம், பொய்க்கால் குதிரை உட்பட 20-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகளுடன், குஜராத் மாநிலத்தின் 'சித்தி கோமா' நடனமும் இடம்பெற்றது.
தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளுக்காக 30-க்கும் மேற்பட்ட உணவு அரங்குகளும், நேரடி உற்பத்தியாளர்களின் சுயதொழில் பொருட்களின் விற்பனை அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் 5½ கிலோ கஞ்சா பறிமுதல் : 5பேர் கைது!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 9:30:42 PM (IST)

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 9:22:48 PM (IST)

ஆன்லைன் ஆவணப்பதிவில் உள்ள குறைபாடுகளைக் களைய எம்பவர் இந்தியா வலியுறுத்தல்!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 8:50:50 PM (IST)

நாட்டு வெடிகுண்டு தயாரித்து ரீல்ஸ் வெளியிட்ட 3பேர் கைது : தூத்துக்குடியில் பரபரப்பு!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 7:33:13 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியை அழகுபடுத்தும் திட்டம் : பொதுமக்கள், தன்னார்வலர்களுக்கு வேண்டுகோள்!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 7:23:02 PM (IST)

விளாத்திகுளத்தில் மினி மராத்தான் போட்டி: ஜி.வி. மார்க்கண்டேயன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 1:59:22 PM (IST)








