» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் கம்பன் கழகத்தின் இலக்கிய ஆய்வரங்கம்

திங்கள் 17, ஆகஸ்ட் 2026 7:53:50 AM (IST)


கோவில்பட்டியில் கம்பன் கழகத்தின் 338வது மாத இலக்கிய ஆய்வரங்கம் எழில் புத்தக நிலையத்தில் நடைபெற்றது. 

முத்தமிழ் மன்றம் அறக்கட்டளை தலைவர் நல்லாசிரியர் வரகவி மா. முருகேசன் தலைமை வகித்தார். கம்பன் கழகப் பொருளாளர் தங்கப்பாண்டி வரவேற்புரை நல்கினார். இந்நிகழ்வில் ஆசிரியப்பணி நிறைவு பெற்ற பார்வதி அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கபட்டு கெளரவிக்கிப்பட்டது.

ஜெயசக்கரவர்த்தி மகேந்திரன் ஆகியோர் கவிதை படைத்தனர், சிறப்புச் சொற்பொழிவினைநட்சத்திரப்பேச்சாளர் கிருஷ்ணன் ஆற்றினார்.கவிஞர் கவிமேகம்,இலக்கியக்குரிசில் நல்லாசிரியர் இராஜாமணி நாடார் காமராஜ் பதின்ம மேல்நிலைப்பள்ளி முதல்வர் பிரபு, கழுகுமலை திருவள்ளுவர் கழக தலைவர் பொன்ராஜ்பாண்டியன், ஆசிரியை கோமதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கம்பன் கழகத் தலைவர் துரைப்பாண்டி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.எழுத்தாளர் பொன்ராஜ் ஆசிரியர் கிருஷ்ணகுமார், ஆர்வலர் சௌந்தர பாண்டியன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். கம்பன் கழகச் செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory