» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிறப்பாகச் செயல்பட்ட காவல் துறையினருக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. நற்சான்றிதழ்!

ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 7:53:54 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றி காவல்துறையினருக்கு திருநெல்வேலி சரக டிஐஜி திருநாவுக்கரசு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொலை வழக்கில் தொடர்புடைய 5 குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் ஆயுள் தண்டனை பெற்றுத் தரப்பட்டது. இவ்வழக்கில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் ஆய்வாளர் ஜீன்குமார் முதல் நிலை பெண் காவலர் பூர்ணகலாஆகியோரின் சிறப்பான பணியைப் பாராட்டி கௌரவிக்கப்பட்டது.

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் எல்லைக்குட்பட்ட தங்க நகைகள் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 2 குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் உரிய தண்டனை பெற்றுத் தந்த தலைமை காவலர் கணேசன் அவர்களது தீவிரமான புலனாய்வு மற்றும் தொடர் முயற்சியைப் பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.

சிறப்பாகப் பணியாற்றிய காவல் ஆய்வாளர், தலைமை காவலர் மற்றும் பெண் காவலர் ஆகியோரைத் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் இரா. திருநாவுக்கரசு இன்று (16.08.2026) நேரில் அழைத்து, அவர்களின் பணியைப் பாராட்டி நற்சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory