» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிறப்பாகச் செயல்பட்ட காவல் துறையினருக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. நற்சான்றிதழ்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 7:53:54 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றி காவல்துறையினருக்கு திருநெல்வேலி சரக டிஐஜி திருநாவுக்கரசு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொலை வழக்கில் தொடர்புடைய 5 குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் ஆயுள் தண்டனை பெற்றுத் தரப்பட்டது. இவ்வழக்கில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் ஆய்வாளர் ஜீன்குமார் முதல் நிலை பெண் காவலர் பூர்ணகலாஆகியோரின் சிறப்பான பணியைப் பாராட்டி கௌரவிக்கப்பட்டது.
தூத்துக்குடி மத்தியபாகம் காவல் எல்லைக்குட்பட்ட தங்க நகைகள் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 2 குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் உரிய தண்டனை பெற்றுத் தந்த தலைமை காவலர் கணேசன் அவர்களது தீவிரமான புலனாய்வு மற்றும் தொடர் முயற்சியைப் பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.
சிறப்பாகப் பணியாற்றிய காவல் ஆய்வாளர், தலைமை காவலர் மற்றும் பெண் காவலர் ஆகியோரைத் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் இரா. திருநாவுக்கரசு இன்று (16.08.2026) நேரில் அழைத்து, அவர்களின் பணியைப் பாராட்டி நற்சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் 5½ கிலோ கஞ்சா பறிமுதல் : 5பேர் கைது!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 9:30:42 PM (IST)

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 9:22:48 PM (IST)

ஆன்லைன் ஆவணப்பதிவில் உள்ள குறைபாடுகளைக் களைய எம்பவர் இந்தியா வலியுறுத்தல்!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 8:50:50 PM (IST)

நாட்டு வெடிகுண்டு தயாரித்து ரீல்ஸ் வெளியிட்ட 3பேர் கைது : தூத்துக்குடியில் பரபரப்பு!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 7:33:13 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியை அழகுபடுத்தும் திட்டம் : பொதுமக்கள், தன்னார்வலர்களுக்கு வேண்டுகோள்!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 7:23:02 PM (IST)

விளாத்திகுளத்தில் மினி மராத்தான் போட்டி: ஜி.வி. மார்க்கண்டேயன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 1:59:22 PM (IST)








