» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தீயணைப்புத் துறை சார்பில் 80-வது சுதந்திர தின விழா

சனி 15, ஆகஸ்ட் 2026 11:23:06 AM (IST)

FiresafetyINdepend.jpg

தூத்துக்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய வளாகத்தில் 80-வது சுதந்திர தின விழா கோலாகலமாக நடைபெற்றது. 

தூத்துக்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய வளாகத்தில் நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மாவட்ட அலுவலர் ஆர். கருணாகரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், பணியாளர்களின் கம்பீரமான அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு சுதந்திர தின விழா சிறப்புரையாற்றினார். அதன்பின் பொதுமக்களுக்கும், நிலையப் பணியாளர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. 

விழாவில், தூத்துக்குடி உதவி மாவட்ட அலுவலர் நட்டார் ஆனந்தி, நிலைய உதவி மாவட்ட அலுவலர் கோமள அமிர்தா, விளாத்திகுளம் நிலைய அலுவலர் சங்கரன், பந்தல்குடி நிலைய அலுவலர்கள் கோட்டைமணி, ரமேஷ் மற்றும் நிலையப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory