» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனங்கள் : அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் வழங்கினார்!
சனி 15, ஆகஸ்ட் 2026 10:31:19 AM (IST)

தூத்துக்குடியில் என்.எல்.சி. தமிழ்நாடு பவர் லிமிடெட் நிறுவனம் சார்பில் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிக்கான மூன்று சக்கர வாகனங்களை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் வழங்கினார்.
தூத்துக்குடி என்.எல்.சி. தமிழ்நாடு பவர் லிமிடெட் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து 50 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ. 90,700 வீதம் மொத்தம் ரூ.45,35,000 மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிக்கான மூன்று சக்கர வாகனங்களை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் வழங்கினார்.
என்.எல்.சி. குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் மூ.குருச்சந்திரன் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் .காமாட்சி, என்.எல்.சி. தமிழ்நாடு பவர் லிமிடெட் முதன்மை அதிகாரி அரவிந்த் ராஜா, பொது மேலாளர் (பராமரிப்பு) பொன்னுசாமி, துணை பொது மேலாளர் (மனிதவளம்) சரவணன் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் 5½ கிலோ கஞ்சா பறிமுதல் : 5பேர் கைது!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 9:30:42 PM (IST)

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 9:22:48 PM (IST)

ஆன்லைன் ஆவணப்பதிவில் உள்ள குறைபாடுகளைக் களைய எம்பவர் இந்தியா வலியுறுத்தல்!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 8:50:50 PM (IST)

நாட்டு வெடிகுண்டு தயாரித்து ரீல்ஸ் வெளியிட்ட 3பேர் கைது : தூத்துக்குடியில் பரபரப்பு!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 7:33:13 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியை அழகுபடுத்தும் திட்டம் : பொதுமக்கள், தன்னார்வலர்களுக்கு வேண்டுகோள்!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 7:23:02 PM (IST)

விளாத்திகுளத்தில் மினி மராத்தான் போட்டி: ஜி.வி. மார்க்கண்டேயன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 1:59:22 PM (IST)









naan thaanAug 15, 2026 - 11:41:45 AM | Posted IP 162.1*****