» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் விபத்தில் காயமடைந்த வாலிபர் உயிரிழப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 11:41:31 AM (IST)
தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அண்ணா நகர் காலனியைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் கார்த்திக் ராஜா (23). இவர் கடந்த 13ஆம் தேதி குளத்தூர் கிழக்கு கடற்கரைச் சாலை விளாத்திகுளம் சாலை சந்திப்பு அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியுள்ளார்.
இவ்விபத்தில் படுகாயமடைந்த கார்த்திக் ராஜா, உடனடியாகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுத் தீவிரச் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி கார்த்திக் ராஜா உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து குளத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மாயமான அண்ணன் - தங்கை: 5 மணி நேரத்தில் திருச்செந்தூர் கடற்கரையில் மீட்பு!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:28:32 AM (IST)

தூத்துக்குடி பனிமய மாதாவின் 444-வது திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:17:35 AM (IST)

ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளியில் 53-வது பெற்றோர் தினவிழா: மாநகராட்சி ஆணையர் எஸ்.பிரியங்கா பங்கேற்பு!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:09:42 AM (IST)

வீட்டின் கதவை உடைத்துத் திருட முயற்சி: இருவர் கைது!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:47:22 AM (IST)

அருணாச்சலம் மரணத்திற்கு முழுமையான நீதி கிடைக்கும் - குடும்பத்தினரிடம் கனிமொழி எம்.பி., ஆறுதல்!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:26:40 AM (IST)

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வெளிநாட்டினரின் சதி: தூத்துக்குடியில் நடிகர் சரத்குமார் பேட்டி!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:22:27 AM (IST)








