» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அதிக மாத்திரைகளை சாப்பிட்ட இளம்பெண் உயிரிழப்பு!

வெள்ளி 17, ஜூலை 2026 11:27:22 AM (IST)

தட்டார்மடம் அருகே நரம்புத் தளர்ச்சி நோயால் மனவேதனையில் அதிகப்படியான மாத்திரைகளை சாப்பிட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தச்சன்விளை பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகள் அனுசியா (23). பிளஸ் 2 முடித்துவிட்டு வீட்டிலிருந்த இவருக்கு, கடந்த இரண்டு வருடங்களாக நரம்புத் தளர்ச்சி நோய் பாதிப்பு இருந்துள்ளது. இதற்காகத் திருநெல்வேலியில் உள்ள மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

தொடர் உடல்நலக் குறைபாடு காரணமாக மனவேதனையடைந்த அனுசியா, வீட்டில் இருந்த மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டுள்ளார். இதனால் உடல் நிலை பாதிக்கப்பட்ட அவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory