» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சட்டவிரோதமாக மதுபான விற்பனை: ஒருவர் கைது!

சனி 20, ஜூன் 2026 11:49:52 AM (IST)

தூத்துக்குடி அருகில் டாஸ்மாக் கடை பின்புறம், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களைப் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்து, 66 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தருவைகுளம் காவல் நிலைய தலைமை காவலர் சின்னத்துரை மற்றும் போலீசார் தீவிர இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள சமத்துவபுரம் டாஸ்மாக் கடையின் பின்புறம் உள்ள காட்டுப் பகுதியில், நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்தார். 

போலீசார் அங்குச் சென்று சோதனையிட்ட போது, அவர் அங்கு கள்ளச்சந்தையில் மதுபான பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அவர் தூத்துக்குடி ஆரோக்கியபுரம் தஸ்நேவிஸ் நகரைச் சேர்ந்த முருகன் மகன் முத்துராஜா (53) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த 66 மதுபான பாட்டில்கள் மற்றும் ரூ.1,000 ரொக்கப் பணம் ஆகியவற்றை கைப்பற்றினர். இது குறித்து தருவைகுளம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory