» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
முதல்முறை வாக்காளர்களுக்குப் பசுமை வரவேற்பு : மரக்கன்றுகள் வழங்கி கௌரவிப்பு!
வியாழன் 23, ஏப்ரல் 2026 3:47:28 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில், முதல் வாக்கினைப் பதிவு செய்த இளம் வாக்காளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழகச் சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (23.04.2026) மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வரும் நிலையில், முதல்முறை வாக்காளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, 216 - திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில், தனது முதல் வாக்கினைப் பதிவு செய்த இளம் வாக்காளர்களுக்குச் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில், திருவைகுண்டம் தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் சன்னி கச்வாஹா நேரில் கலந்துகொண்டு, ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய இளைஞர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிப் பாராட்டுகளைத் தெரிவித்தார்.
முதல்முறை வாக்காளர்கள் தேர்தல்களில் ஆர்வத்துடன் பங்கேற்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. வாக்களிப்பது தார்மீகக் கடமை என்பதைத் தாண்டி, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தும் வகையில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. அதிகாரிகளின் இந்தச் செயலால் நெகிழ்ந்த இளம் வாக்காளர்கள், தங்களின் முதல் தேர்தல் அனுபவம் மறக்க முடியாத பசுமை நினைவாக அமைந்ததாகத் தெரிவித்தனர்.
திருவைகுண்டம் தொகுதியில் தற்போது வரை வாக்குப்பதிவு எவ்வித அசம்பாவிதங்களுமின்றி சுமுகமாகவும், அமைதியான முறையிலும் நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்குத் தேவையான குடிநீர், நிழற்பந்தல் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் தேர்தல் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வெல்டிங் கடை உரிமையாளர் தூக்கிட்டுத் தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்!
சனி 25, ஏப்ரல் 2026 11:45:34 AM (IST)

ரயிலில் புகையிலை, குட்கா கடத்தியவர் கைது : கோவில்பட்டி ரயில் நிலையத்தில் சிக்கினார்!
சனி 25, ஏப்ரல் 2026 11:20:09 AM (IST)

தூத்துக்குடியில் ஒருவர் கட்டையால் தாக்கி கொலை : மதுபோதையில் நண்பர் வெறிச்செயல்!
சனி 25, ஏப்ரல் 2026 10:21:03 AM (IST)

வெயிலின் உக்கிரத்தில் தண்ணீருக்காக தவிக்கும் மக்கள்: ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
சனி 25, ஏப்ரல் 2026 10:11:07 AM (IST)

இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்: தூத்துக்குடி அருகே பரபரப்பு!
சனி 25, ஏப்ரல் 2026 9:02:30 AM (IST)

தூத்துக்குடி தென்பாகம் ஆய்வாளர் மாற்றம்: எஸ்.பி. மதன் உத்தரவு!
சனி 25, ஏப்ரல் 2026 8:53:42 AM (IST)







