» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது!
வியாழன் 9, ஏப்ரல் 2026 4:57:55 PM (IST)
தூத்துக்குடியில், சட்டவிரோதமாகப் புகையிலை பொருட்களைக் கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 45 கிலோ 500 கிராம் புகையிலை பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுனில் மேற்பார்வையில், தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சோனியா மற்றும் போலீசார் இன்று சிதம்பரநகர் பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்திச் சோதனை செய்தனர்.
சோதனையில், வாகனத்தை ஓட்டி வந்தவர் தூத்துக்குடியைச் சேர்ந்த வன்னியராஜன் (52) என்பதும், அவர் இருசக்கர வாகனத்தில் சட்டவிரோத விற்பனைக்காகத் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மறைத்து வைத்து கடத்தி வந்ததும் கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, வன்னியராஜனை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 45 கிலோ 500 கிராம் புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் ஏப்ரல் 17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை : ஜூன் 1-ல் புதிய கல்வியாண்டு தொடக்கம்!
வியாழன் 9, ஏப்ரல் 2026 9:04:48 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் களம் காணும் முக்கிய வேட்பாளர்கள் பட்டியல்!
வியாழன் 9, ஏப்ரல் 2026 8:12:24 PM (IST)

தாமிரபரணி ஆற்று மணலில் தேர்தல் விழிப்புணர்வு சிற்பம்: 100% வாக்குப்பதிவு வலியுறுத்தல்!
வியாழன் 9, ஏப்ரல் 2026 4:45:06 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.77 லட்சம் ரொக்கம் பறிமுதல் - மாவட்ட ஆட்சியர் தகவல்!
வியாழன் 9, ஏப்ரல் 2026 3:25:18 PM (IST)

100% வாக்குப்பதிவு: உப்பளத் தொழிலாளர்களிடம் ஆட்சியர் விஷு மகாஜன் விழிப்புணர்வு!
வியாழன் 9, ஏப்ரல் 2026 12:14:57 PM (IST)

நெல்லை, தூத்துக்குடியில் விஜய் பிரசாரம்: 15 பேர் காயம்; த.வெ.க. நிர்வாகிகள் 11 பேர் மீது வழக்கு!
வியாழன் 9, ஏப்ரல் 2026 11:40:28 AM (IST)







