» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அருகே தனியார் பேருந்து விபத்து: ஓட்டுநர் பலி - 9 பயணிகள் படுகாயம்!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 11:01:51 AM (IST)

தூத்துக்குடி அருகே தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் இருந்து தூத்துக்குடி வழியாகப் பசுவந்தனைக்கு இன்று காலை ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தைச் செய்துங்கநல்லூர் அருகே உள்ள வில்லாகுளம் கிராமத்தைச் சேர்ந்த பிச்சையா என்பவரது மகன் மணிமுத்து (55) ஓட்டி வந்தார். நடத்துனராக ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஆவரைகுளம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் பணியாற்றி வந்தார்.
சுமார் 60-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்து கொண்டிருந்த அந்தப் பேருந்து, இன்று காலை 8:15 மணியளவில் தூத்துக்குடி - திருநெல்வேலி பிரதான சாலையில் உள்ள மறவன்மடம் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாடின்றிச் சென்ற பேருந்து, சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியதோடு, அங்கிருந்த ஒரு பனைமரத்தின் மீதும் மோதியது.
அதன்பின்னரும் நிற்காமல் சுமார் 100 அடி தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு, ஒரு கட்டிடத்தின் மீது மோதி நின்றது. இந்தக் கோர விபத்தில், பேருந்து ஓட்டுநர் மணிமுத்து இடிபாடுகளுக்குள் சிக்கி அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், பேருந்தில் பயணம் செய்த பயணிகளில் 9 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விபத்திற்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தச் விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் ஏப்ரல் 17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை : ஜூன் 1-ல் புதிய கல்வியாண்டு தொடக்கம்!
வியாழன் 9, ஏப்ரல் 2026 9:04:48 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் களம் காணும் முக்கிய வேட்பாளர்கள் பட்டியல்!
வியாழன் 9, ஏப்ரல் 2026 8:12:24 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது!
வியாழன் 9, ஏப்ரல் 2026 4:57:55 PM (IST)

தாமிரபரணி ஆற்று மணலில் தேர்தல் விழிப்புணர்வு சிற்பம்: 100% வாக்குப்பதிவு வலியுறுத்தல்!
வியாழன் 9, ஏப்ரல் 2026 4:45:06 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.77 லட்சம் ரொக்கம் பறிமுதல் - மாவட்ட ஆட்சியர் தகவல்!
வியாழன் 9, ஏப்ரல் 2026 3:25:18 PM (IST)

100% வாக்குப்பதிவு: உப்பளத் தொழிலாளர்களிடம் ஆட்சியர் விஷு மகாஜன் விழிப்புணர்வு!
வியாழன் 9, ஏப்ரல் 2026 12:14:57 PM (IST)








BabuApr 7, 2026 - 10:28:08 PM | Posted IP 162.1*****