» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் தேர்தல் அலுவலர்களுக்கான சிறப்புப் பயிற்சி: ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
சனி 4, ஏப்ரல் 2026 5:29:04 PM (IST)

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் - 2026 பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான விஷு மகாஜன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தால் கடந்த மார்ச் 15-ஆம் தேதி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு நாளன்று தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவதற்காக, பல்வேறு அரசுத்துறைகளைச் சேர்ந்த பணியாளர்கள் கணினி முறைப்படி தற்செயலாக (Randomization) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் நிலைப் பணியாளர்கள் (மண்டல அலுவலர்கள் 1, 2, 3) ஆகியோருக்கான முதற்கட்டப் பயிற்சி வகுப்பு கடந்த 28.03.2026 அன்று அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்றது. கடந்த மார்ச் 28-ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்டப் பயிற்சியில் பல்வேறு காரணங்களால் கலந்துகொள்ள முடியாத பணியாளர்களுக்காக, இன்று (04.04.2026) தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சிறப்புப் பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளையும் சேர்ந்த விடுபட்ட பணியாளர்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்றனர். இதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாளுதல், தேர்தல் விதிமுறைகள் மற்றும் வாக்குப்பதிவு நாளன்று மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
காமராஜ் கல்லூரியில் நடைபெற்று வரும் இந்தப் பயிற்சி மையத்திற்கு நேரில் சென்ற மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், பயிற்சியின் தரத்தைப் பார்வையிட்டார். அப்போது, தேர்தல் பணிகளில் எவ்விதத் தொய்வுமின்றி, முழுமையான கவனத்துடன் பணியாற்றுமாறு அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். இந்நிகழ்வின் போது தேர்தல் பிரிவு அதிகாரிகள் மற்றும் பயிற்சி அளிக்கும் பயிற்றுநர்கள் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாளை முடிகிறது வேட்புமனுத் தாக்கல்: இதுவரை 94 மனுக்கள் தாக்கல் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:44:17 AM (IST)

கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம்: 7 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் தீயில் கருகின!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:33:16 AM (IST)

திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் மீன் வரத்து குறைவு: போட்டி போட்டு வாங்கிய பொதுமக்கள்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:48:37 AM (IST)

மெரினாவில் இடம் கொடுத்தது அதிமுக அரசுதான் : கோவில்பட்டியில் கடம்பூர் ராஜூ விளக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:42:16 AM (IST)

கடற்கரையில் கஞ்சா விற்பனை: 4 பேர் கைது – 1 கிலோ கஞ்சா பறிமுதல்!
சனி 4, ஏப்ரல் 2026 8:06:41 PM (IST)

கோவில்பட்டியில் கடம்பூர் ராஜூ வேட்பு மனு தாக்கல்
சனி 4, ஏப்ரல் 2026 7:06:36 PM (IST)







