» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.67 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
சனி 4, ஏப்ரல் 2026 4:24:07 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.67 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் - 2026 முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பொருட்கள் விநியோகம் செய்வதைத் தடுக்க மாவட்ட முழுவதும் பறக்கும் படைகள் (Flying Squads) மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் (Static Surveillance Teams) தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று (04.04.2026) வரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் விவரங்களை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான விஷு மகாஜன், வெளியிட்டுள்ளார்.
பறிமுதல் செய்யப்பட்ட விவரங்கள்:
- உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட மொத்த ரொக்கத் தொகை ரூ. 67,08,115/- பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- தேர்தல் விதிகளை மீறி கொண்டு வரப்பட்ட ரூ. 13,24,298/- மதிப்பிலான இலவசப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
- சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட ரூ. 4,25,262/- மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- சோதனையின் போது ரூ. 7,35,640/- மதிப்பிலான போதைப்பொருட்கள் கண்டறியப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்புப் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் உரிய ஆவணங்களின்றி அதிக அளவில் பணத்தைக் கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாகப் பொதுமக்கள் மாவட்டக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கலாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாளை முடிகிறது வேட்புமனுத் தாக்கல்: இதுவரை 94 மனுக்கள் தாக்கல் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:44:17 AM (IST)

கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம்: 7 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் தீயில் கருகின!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:33:16 AM (IST)

திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் மீன் வரத்து குறைவு: போட்டி போட்டு வாங்கிய பொதுமக்கள்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:48:37 AM (IST)

மெரினாவில் இடம் கொடுத்தது அதிமுக அரசுதான் : கோவில்பட்டியில் கடம்பூர் ராஜூ விளக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:42:16 AM (IST)

கடற்கரையில் கஞ்சா விற்பனை: 4 பேர் கைது – 1 கிலோ கஞ்சா பறிமுதல்!
சனி 4, ஏப்ரல் 2026 8:06:41 PM (IST)

கோவில்பட்டியில் கடம்பூர் ராஜூ வேட்பு மனு தாக்கல்
சனி 4, ஏப்ரல் 2026 7:06:36 PM (IST)







