» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ரயில் முன் பாய்ந்து கடலை மிட்டாய் வியாபாரி தற்கொலை: குடும்பத் தகராறில் பரிதாபம்!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 11:40:03 AM (IST)
மணியாச்சி அருகே குடும்பத் தகராறு காரணமாக, கடலை மிட்டாய் வியாபாரி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் திருமலை. இவரது மகன் சின்னதுரை (57). இவர் மணியாச்சி ரயில் நிலையத்தில் கடலை மிட்டாய் வியாபாரம் செய்து வந்தார். சின்னதுரை கடந்த சில நாட்களாக மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவருக்கும், அவரது மனைவி சிவகாமிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.
நேற்று மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த சின்னதுரை "தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்" எனக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். வெளியே சென்ற சின்னதுரை, மணியாச்சி ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலி செல்லும் இருப்புப் பாதையில் வந்து கொண்டிருந்த ரயில் முன் பாய்ந்து உயிரிழந்தார். இது குறித்து திருநெல்வேலி ரயில்வே காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஊர்வசி அமிர்தராஜ் மீண்டும் போட்டி : காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 4:46:00 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 460 புதிய சிசிடிவி கேமராக்கள்: எஸ்பி மதன் தொடங்கி வைத்தார்
வெள்ளி 3, ஏப்ரல் 2026 4:34:21 PM (IST)

கோவில்பட்டி பள்ளியில் மாணவர்களுக்கான மேற்படிப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி
வெள்ளி 3, ஏப்ரல் 2026 3:22:26 PM (IST)

திருச்செந்தூரில் கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் : பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 3:12:14 PM (IST)

பனிமய மாதா ஆலயத்தில் சிலுவைப்பாதை வழிபாடு: திரளான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்பு
வெள்ளி 3, ஏப்ரல் 2026 12:40:49 PM (IST)

தூத்துக்குடியில் 24 மணி நேரத் தேர்தல் கட்டுப்பாட்டு அறை: மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 12:12:07 PM (IST)







