» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 3 பேரிடம் செல்போன் பறிப்பு: மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!

வெள்ளி 3, ஏப்ரல் 2026 11:29:32 AM (IST)

தூத்துக்குடியில் மூன்று இடங்களில் முதியவர்களை மிரட்டி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி தாளமுத்து நகர் ஜே.சி. நகரைச் சேர்ந்த சுந்தர்ராஜ் (63) என்பவர் நேற்று இரவு சாலையில் நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை மிரட்டி செல்போனைப் பறித்துச் சென்றது. அதே கும்பல், தாளமுத்து நகர் முதல் தெருவைச் சேர்ந்த ஜெரால்ட் அலெக்சாண்டர் (60) என்பவரிடமும் செல்போனைப் பறித்துக் கொண்டு தப்பியது.

மேலும், கிருஷ்ணராஜபுரம் ரோட்டில் நடந்து சென்ற மற்றொரு நபரிடமும் அந்த கும்பல் கைவரிசை காட்டியுள்ளது. பறிக்கப்பட்ட மூன்று செல்போன்களின் மொத்த மதிப்பு ரூபாய் 34,000 ஆகும். இச்சம்பவங்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், தாளமுத்து நகர் மற்றும் வடபாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஒரே இரவில் அடுத்தடுத்து நடந்த இந்தத் தொடர் பறிப்புச் சம்பவங்கள் தூத்துக்குடி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளைப் பிடிக்கப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory