» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 13 நாய்கள் விஷம் வைத்து கொலை? போலீசார் விசாரணை
வெள்ளி 3, ஏப்ரல் 2026 11:16:30 AM (IST)
தூத்துக்குடியில் 13 நாய்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தூத்துக்குடியில் நாளுக்கு நாள் தெருக்களில் நாய்களின் அட்டகாசம் தொடர்ந்து வருகிறது. இருசக்கர வாகனங்களில் செல்வோர்களை விரட்டி விரட்டி கடிக்கிறது. மேலும் இரவு நேரங்களில் நடுரோட்டுகளில் கூட்டம் கூட்டமாய் நாய்கள் கிடப்பதால் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ளது.
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 6வது தெருவில் கடந்த 3 தினங்களில் 13 நாய்கள் மர்மமான முறையில் ஆங்காங்கே இறந்து கிடந்தன. இது குறித்து அப்பகுதி மக்கள் வடபாகம் காவல் நிலையத்திற்கும் கால்நடை மருத்துவமனைக்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
மேலும் கால்நடை மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று நாய்களை பிரேத பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். மேலும் இந்த நாய்கள் அனைத்தும் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஊர்வசி அமிர்தராஜ் மீண்டும் போட்டி : காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 4:46:00 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 460 புதிய சிசிடிவி கேமராக்கள்: எஸ்பி மதன் தொடங்கி வைத்தார்
வெள்ளி 3, ஏப்ரல் 2026 4:34:21 PM (IST)

கோவில்பட்டி பள்ளியில் மாணவர்களுக்கான மேற்படிப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி
வெள்ளி 3, ஏப்ரல் 2026 3:22:26 PM (IST)

திருச்செந்தூரில் கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் : பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 3:12:14 PM (IST)

பனிமய மாதா ஆலயத்தில் சிலுவைப்பாதை வழிபாடு: திரளான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்பு
வெள்ளி 3, ஏப்ரல் 2026 12:40:49 PM (IST)

தூத்துக்குடியில் 24 மணி நேரத் தேர்தல் கட்டுப்பாட்டு அறை: மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 12:12:07 PM (IST)







