» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண்களை அவதூறாகப் பேசிய பொன்ராஜ் மீது நடவடிக்கை : தூத்துக்குடி எஸ்பியிடம் புகார்!

வெள்ளி 27, மார்ச் 2026 4:21:08 PM (IST)



பெண்களை அவதூறாகப் பேசிய பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியிடம் புகார் மனு அளித்தனர். 

தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் வழக்கறிஞர் டி.வி.ஏ. பிரைட்டர் தலைமையில், அக்கட்சியின் நிர்வாகிகள் இன்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குத் திரண்டு வந்து புகார் மனு அளித்தனர்.

அதில், பெண்களைப் பற்றி இணையதளத்தில் தரக்குறைவாகவும், அவதூறாகவும் விமர்சனம் செய்த பொன்ராஜ் வெள்ளைச்சாமி என்பவர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இந்தநிகழ்வின் போது தெற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர், மகளிர் அணி இணை அமைப்பாளர்கள், மாவட்ட மற்றும் மாநகர நிர்வாகிகள் மற்றும் கழக உறுப்பினர்கள் பலர் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital




Thoothukudi Business Directory