» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மகளிர் உரிமைத் தொகை ரூ.2ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்: அமைச்சர் கீதாஜீவன் பேட்டி
வெள்ளி 13, பிப்ரவரி 2026 11:32:02 AM (IST)

திராவிட மாடல் ஆட்சி தொடரும், மகளிர் உரிமைத் தொகை ரூ.2ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 5,000 இன்று காலை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதத்துக்கான ரூ.1,000 பணத்துடன், மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கு முன்பணமாக ரூ.2,000 மற்றும் கோடைக்கால சிறப்பு தொகுப்பாக ரூ. 2,000 என மொத்தம் ரூ. 5,000 வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதல்வரின் அறிவிப்பை வரவேற்று தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், "முதல்வரின் அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. உழைக்கும் மகளிருக்கான உரிமைத் தொகையை தேர்தல் வாக்குறுதிப்படி 2ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். விடுபட்டவர்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாமில் முறையீடு செய்யலாம். மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தொடரும், மீண்டும் ஸ்டாலின் முதல்வராவார் என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத்தில் புதிய பயணியர் நிழற்குடை, ஐ லவ் நாசரேத் செல்ஃபி பாயிண்ட் திறப்பு விழா
சனி 14, பிப்ரவரி 2026 8:39:39 PM (IST)

தூத்துக்குடியில் அதிமுக போட்டி: முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பேட்டி
சனி 14, பிப்ரவரி 2026 8:33:04 PM (IST)

மின்மாற்றியை இடமாற்றம் செய்ய வேண்டும்: இந்து முன்னணி கோரிக்கை!
சனி 14, பிப்ரவரி 2026 8:27:04 PM (IST)

பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி திட்டங்கள் கலந்தாய்வு கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு!
சனி 14, பிப்ரவரி 2026 5:53:48 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மகா சனி பிரதோஷம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
சனி 14, பிப்ரவரி 2026 5:31:12 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் நாளை மகா சிவராத்திரி விழா: நான்கு கால சிறப்பு பூஜைகள் அறிவிப்பு!
சனி 14, பிப்ரவரி 2026 3:34:39 PM (IST)











விஜய் ரசிகன்Feb 13, 2026 - 12:30:43 PM | Posted IP 104.2*****