» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குளத்தில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

செவ்வாய் 3, பிப்ரவரி 2026 10:08:27 AM (IST)

சாத்தான்குளம் அருகே குளத்தில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை, சவேரியாா்புரத்தைச் சோ்ந்தவா் பொன்ராஜ் மகன் ஜெபசீலன் (26), காா் ஓட்டுநர். அதே பகுதியைச் சோ்ந்த இவரது நண்பரான ஜேசுராஜுடன், சாத்தான்குளம் அருகேயுள்ள பனைகுளத்தைச் சோ்ந்த ஜெலஸ்டின், வசவப்பநேரியைச் சோ்ந்த அசோக் ஆகியோரைப் பாா்ப்பதற்காக பேய்குளத்திற்கு சென்றனா்.

பின்னா், முசலைக்குளம் பகுதியில் 4 பேரும் மது அருந்தியுள்ளனா். அப்போது, வாந்தி எடுத்த ஜெபசீலன், குளத்தில் முகம் கழுவச் சென்றபோது, தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளாா். இதையடுத்து, அவரது நண்பா்கள், போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். 

சாத்தான்குளம் தீயணைப்பு நிலைய வீரா்கள், போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பாா்த்தபோது, நீரில் மூழ்கி ஜெபசீலன் உயிரிழந்தது தெரியவந்தது. போலீசார் அவரது சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து, சாத்தான்குளம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital

CSC Computer Education



Thoothukudi Business Directory