» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தெப்பக்குளம் புற்று மாரியம்மன் கோவிலில் புஷ்பாஞ்சலி பூஜை

ஞாயிறு 1, பிப்ரவரி 2026 8:24:12 PM (IST)



தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் உள்ள புற்றுமாரியம்மன் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு புஷ்பாஞ்சலி பூஜை நடந்தது.

தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் உள்ள புற்று மாரியம்மன் கோவிலில் 24ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழா  காலை 6:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. காலை 8 மணிக்கு சர்ப்ப ஹோமம், 10 மணிக்கு 108 சங்காபிஷேகம் மற்றும் தீபாரணை நடந்தது. 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாரணை நடந்தது. இதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு புஷ்பாஞ்சலி பூஜை நடந்தது. 

இரவு 7 மணிக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு வளையல், குங்குமம், மஞ்சள் கயிறு மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழாவில்  அறங்காவலர் குழு தலைவர் செல்வ சித்ரா அறிவழகன் அறங்காவலர்கள் மகாராஜன் பால குருசாமி உள்பட திரளான பக்தர்கள் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் பட்டர்கள் சிவா, குரு ஆகியோர் செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory