» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாலுமாவடியில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை!
ஞாயிறு 1, பிப்ரவரி 2026 7:42:43 PM (IST)

நாலுமாவடியில் நடந்த தேர்வு எழுதும் மாணவர்களுக்கான சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் வருடந்தோறும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் இன்று பிப்ரவரி 1ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 1 மணி முதல் 4 மணி வரை தேர்வு எழுதும் மாணவ_ மாணவிகளுக்கான சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
இயேசு விடுவிக்கிறார் ஜெபக்குழுவினர் பாடல்கள் பாடினர். இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ் தேவ செய்தி கொடுத்து தேர்வு எழுதும் மாணவ_ மாணவர்களுக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். படிப்பிற்கான ஆலோசனை, சாதனையாளர்களின் அனுபவ சாட்சி, படக்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
இதில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 3 ஆயிரம் மாணவ_ மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொது மேலாளர் செல்வக்குமார் மற்றும் ஜெபக்குழுவினர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தொகுதியை மீனவர் சமுதாயத்திற்கே ஒதுக்க வேண்டும்: ஒருங்கிணைப்பு குழு பேட்டி!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:55 PM (IST)

கருகிய மிளகாய் பயிர்களுக்கு உரிய நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:17 PM (IST)

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:39:12 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 4 மில்லியன் டன் சரக்குகள் கையாண்டு சாதனை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:14:09 PM (IST)

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் மாணவ-மாணவிகள் களப்பயணம்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:57:58 PM (IST)

பிப்.16ல் திருமண்டல நிர்வாகிகள் தேர்தல்: நிர்வாகி ஜோதிமணி அறிவிப்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:52:34 PM (IST)









