» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஆயுதங்கள் தயாரித்து விற்பனை: பட்டறை உரிமையாளர் கைது!

ஞாயிறு 1, பிப்ரவரி 2026 2:18:25 PM (IST)

தூத்துக்குடியில் பயங்கர ஆயுதங்கள் தயாரித்து விற்பனை செய்த பட்டறை அதிபரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி சில்வர் புரத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் கணபதி (61), இவர் மாப்பிள்ளையூரணியில் இரும்பு பட்டறை வைத்துள்ளார். அந்த பட்டறையில் ஆயுதங்கள் தயாரித்து விற்பதாக தாளமுத்து நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையிலான போலீசார் இரும்பு பட்டறையில் சோதனை செய்தனர்.

சோதனையில் அங்கு விற்பனைக்காக தயாரித்து வைக்கப்பட்டிருந்த 5 அரிவாள்கள், 3கத்திகளை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணை செய்ததில் கணபதியை கடந்த பல ஆண்டுகளாகவே பட்டறையில் பயங்கர ஆயுதங்கள் தயாரித்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education


Arputham Hospital




Thoothukudi Business Directory