» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வீட்டில் தயாரிக்கப்பட்ட ரூ.10 லட்சம் பட்டாசுகள் பறிமுதல் : 8 பேர் கைது
ஞாயிறு 1, பிப்ரவரி 2026 9:34:27 AM (IST)

எட்டயபுரத்தில் அனுமதியின்றி வீட்டில் தயாரிக்கப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 8 பேரை கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கமலாபுரத்தைச் சேர்ந்தவர் சின்ன கருப்பசாமி (53). இவருக்கு சொந்தமான வீடு எட்டயபுரம் பாரதியார் மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு பின்புறம் உள்ளது. இவரது வீட்டில் அரசு அனுமதி பெறாமல் தொழிலாளர்களை பணியமர்த்தி சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக நேற்று போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து எட்டயபுரம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் அங்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் உரிய அனுமதி பெறாமல் பட்டாசு தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அங்கிருந்த சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் மற்றும் அவற்றை தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிந்து வீட்டின் உரிமையாளர் சின்ன கருப்பசாமி, பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலை சேர்ந்த சுப்பிரமணியன் (31), கதிரேசன் (27), சிவகாசியைச் சேர்ந்த சரவணன் (28), மீனம்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் (54), எட்டயபுரம் அருகே தலைகாட்டுபுரத்தை சேர்ந்த அய்யப்பன் (39), ராமனூத்தைச் சேர்ந்த அந்தோணி (70), பட்டாசு தயாரிப்பு பணியின் உரிமையாளர் சின்ன கருப்பசாமி ஆகிய 8 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தொகுதியை மீனவர் சமுதாயத்திற்கே ஒதுக்க வேண்டும்: ஒருங்கிணைப்பு குழு பேட்டி!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:55 PM (IST)

கருகிய மிளகாய் பயிர்களுக்கு உரிய நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:17 PM (IST)

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:39:12 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 4 மில்லியன் டன் சரக்குகள் கையாண்டு சாதனை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:14:09 PM (IST)

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் மாணவ-மாணவிகள் களப்பயணம்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:57:58 PM (IST)

பிப்.16ல் திருமண்டல நிர்வாகிகள் தேர்தல்: நிர்வாகி ஜோதிமணி அறிவிப்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:52:34 PM (IST)









