» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் தனியார் நிறுவன டிரைவர் திடீர் சாவு

செவ்வாய் 16, டிசம்பர் 2025 10:55:27 AM (IST)

தூத்துக்குடியில் தனியார் நிறுவன டிரைவர் திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் பழனி (58), இவர் தூத்துக்குடி துறைமுகம் மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள தனியார் பிளவர் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று காலை கம்பெனியில் உள்ள டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்து போன பழனிக்கு சண்முகவடிவு என்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education


Arputham Hospital



Thoothukudi Business Directory