» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.70 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்!

சனி 13, டிசம்பர் 2025 8:59:30 AM (IST)



தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற  ரூ.70 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

தூத்துக்குடியில் கடலோர காவல் படை இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையில் தருவைகுளம் கடலோர காவல் படை சப் இன்ஸ்பெக்டர் ஆதிஸ்வரன் மற்றும் சிறப்புப்படை போலீசார் திரேஸ்புரம்  கடற்கரையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் ரோந்துபணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக படகில் ஏற்றிக் கொண்டிருந்த  பீடி இலைகளை கடத்தல் கும்பல் போலீசாரை பார்த்ததும் அப்படியே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து அங்கு கிடந்த ரூ.70 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை கைப்பற்றினர். இது சம்பந்தமாக கடத்தல் கும்பலை போலீசார்  தேடி வருகிறார்கள். மேலும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital

CSC Computer Education








Thoothukudi Business Directory