» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மாவட்ட மூத்தோர் தடகள போட்டி: பழையகாயல் ஆசிரியர் மாநில போட்டிக்கு தகுதி

செவ்வாய் 2, டிசம்பர் 2025 10:10:13 AM (IST)

தூத்துக்குடியில் நடைபெற்ற மாவட்ட மூத்தோர் தடகள போட்டியில் முதலிடம் பிடித்து பழையகாயல் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மாநில தடகள போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளார்.

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மைதானத்தில் மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் மற்றும் இந்தியன் இன்ஸ்டிட் யூட் ஆஃப் பாராமெடிக்கல் சயின்ஸ் சார்பில் மூத்தோருக்கான தடகளப் போட்டிகள் நடைபெற்றது. இதில் முன்னாள் தடகள வீரர்கள், மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், காவல்து றையினர் உடற்கல்வி துறையினர் மற்றும் பொதுநிலையினர் என பல்வேறு தரப்பினரும் கலந்துக் கொண்டனர்.

அதில் பழையகாயல் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரியும் எஸ். வின்ஸ்டன் 40 - 45 வயது பிரிவில் 400 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம் பிடித்து மாநில தடகள போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளார். இதையடுத்து அடுத்த மாதம் அழகப்பா பல்கலைக்கழகம் காரைக்குடியில் நடைபெற இருக்கும் மாநில தடகளப் போட்டிக்கு ஆசிரியர் வின்ஸ்டன் தகுதி பெற்றுள்ளார்.

போட்டியில் வெற்றி பெற்று சாதனைப் படைத்த உடற்கல்வி ஆசிரியரை பழையகாயல் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி தாளாளர், தலைமையாசிரியர், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினரும் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital


CSC Computer Education






Thoothukudi Business Directory