» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் குளம் போல் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசும் அவலம் : பொதுமக்கள் அவதி!
ஞாயிறு 30, நவம்பர் 2025 8:41:52 PM (IST)

தூத்துக்குடியில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீரால் சுகாதார சீர்கேடு நிலவுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தூத்துக்குடி மாநகர பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்தது. மாநகரில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் வீட்டிலிருந்து வெளியே வர முடியாத சூழ்நிலையும் நிலவி வருகிறது. இந்த நிலையில் அம்பேத்கர் நகர் ஸ்டெம் பார்க் அருகில் சுந்தரவேல் புரம் மேற்கு பகுதியில் 40 அடி ரோட்டில் மழை நீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது.
தேங்கிக்கிடக்கும் நீரை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கையை மாநகராட்சி மேற்கொண்டாலும் தொடர்ந்து மழைநீர் குறைந்ததாகவே தெரியவில்லை அங்கு தேங்கியுள்ள மழை நீர் துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளதால் பல்வேறு விதமான நோய்கள் பரவும் சூழ்நிலை உருவாகி இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆகையால் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அங்கு தேங்கியுள்ள மழை நீரை முழுவதுமாக அப்புறப்படுத்த வேண்டும், வரும் காலங்களில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஒவ்வொரு முறையும் மழை நீரை அப்புறப்படுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ள மின் மோட்டார் பெயரளவுக்குத்தான் மோட்டாராக உள்ளது. மின்மோட்டார் இயக்குவது கிடையாது அதனால் மழை நீர் வெளியே செல்ல முடியாத சூழ்நிலையும் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாநகராட்சி நிர்வாகம் அங்கு வைக்கப்பட்டுள்ள இரண்டு மின்மோட்டரையும் உடனடியாக முழுவதும் இயக்க வேண்டும் என்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஒரே இரவில் 25 மாடுகள் பறிமுதல் : மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை!
வெள்ளி 5, டிசம்பர் 2025 3:09:50 PM (IST)

ஜெயலலிதா நினைவு தினம் : அதிமுக சார்பில் மரியாதை!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:52:22 PM (IST)

தூத்துக்குடியில் மாடு குறுக்கே வந்ததால் பைக் விபத்து : பால் வியாபாரி உயிரிழப்பு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:04:32 PM (IST)

மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் நிர்ணயம் : ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 11:51:25 AM (IST)

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் மதவாத அரசியலை மக்கள் முறியடிப்பார்கள்: கனிமொழி
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:34:19 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் நயினார் நாகேந்திரன் கைது : தூத்துக்குடியில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:25:52 AM (IST)











kumarDec 1, 2025 - 11:50:19 AM | Posted IP 172.7*****