» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள்: மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்

ஞாயிறு 30, நவம்பர் 2025 10:14:41 AM (IST)



தூத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்களை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.
      
தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், அவ்வப்போது மிதமான மற்றும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் டிட்வா புயல் உருவானதையொட்டி கடந்த இரு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவை மாநகராட்சி நிர்வாகம் மூலம் ஒவ்வொரு பகுதிகளின் நிலை என்ன என்பதை கண்காணிக்கப்பட்டு 3 டிவிஷனாக பிரிக்கப்பட்டு மாநகராட்சி அதிகாரிகள் அலுவலர்கள் முழுவீச்சில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், தூய்மை பணியாளர்களுக்கு தேவையான கையுறை பாதுகாப்பு உடைகள் உபகரணங்களை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஆணையர் ப்ரியங்கா முன்னிலையில் மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார். நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, உதவி பொறியாளர் சரவணன், நகரமைப்பு திட்ட செயற்பொறியாளர் வேலாயுதம், உதவி செயற்பொறியாளர் காந்திமதி, உதவி ஆணையர் வெங்கட்ராமன், நகர்நல அலுவலர் சரோஜா, சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியநாதன், மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலெட்சுமி, மற்றும் கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education




Arputham Hospital




Thoothukudi Business Directory