» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி ஸ்டெம் பார்க் பகுதியில் குளம் அமைக்கும் பணி : மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

ஞாயிறு 13, ஜூலை 2025 11:26:34 AM (IST)



தூத்துக்குடி மாநகராட்சி ஸ்டெம் பார்க் பகுதியில் குளம் அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் பொழுதுபோக்கும் விதமாகவும் மாநகரை சீராக்கும் வண்ணமாகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி ஸ்டெம் பார்க் பகுதியில் பொதுமக்கள் அமர்ந்து இயற்கை ரசிக்கும் வண்ணமாக குளம் அமைக்கும் பணியானது மாநகராட்சியால் நடைபெற்று வருகின்றது. 

இதன் மூலம் அந்த இடத்தில் மாநகர மக்கள் குளத்தை சுற்றியபடி அமர்ந்தும் நடந்தும் வர முடியும் என்றும் பறவைகள் நீர் அருந்துவதற்கான அமைப்புகளும் உருவாக்கப்பட்டு வருகின்றது தற்போது நடைபெற்ற வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தேன் என்று தெரிவித்தார். ஆய்வின்போது மாமன்ற உறுப்பினர்கள் சுரேஷ் குமார், ரெங்கசாமி, தெய்வேந்திரன், நாகேஸ்வரி, போல்பேட்டை பகுதி தொண்டரணி துணை அமைப்பாளர் அன்பரசன் உட்பட பலர் உடனிருந்தனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education






Arputham Hospital



Thoothukudi Business Directory