» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பள்ளி அருகே குப்பைகள் குவிப்பு : மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

வெள்ளி 4, ஏப்ரல் 2025 10:39:20 AM (IST)



தூத்துக்குடியில் பள்ளி அருகே சாலையில் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

தூத்துக்குடி நியூ காலனி, தாமோதர நகர் பகுதியில் தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. இந்த பகுதியில் 10 தினங்களுக்கு முன்பாக ஒரு வீட்டில் வெட்டப்பட்ட சவுக்கு மரக் கழிவுகளை சாலையோரம் கொட்டியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பள்ளி நேரங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. 

மேலும், ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்களில் குழந்தைகளை அழைத்து வருபவர்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையோரம் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors

Arputham Hospital

CSC Computer Education







Thoothukudi Business Directory