» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தெற்கு பீச் ரோடு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: மேயருக்கு திமுக கவுன்சிலர் கோரிக்கை!
சனி 29, மார்ச் 2025 11:56:20 AM (IST)
தூத்துக்குடி தெற்கு பீச் ரோடு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என 40-வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் ஜெ.ரிக்டா ஆர்தர் மச்சாது கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேயருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "40-வது வார்டுக்கு உட்பட்ட தெற்கு பீச் ரோடு மாதா கோயில் முன்பு அனைவரும் இரண்டு கடைகள் மற்றும் பந்தல் அமைத்தும் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருக்கிறார்கள். வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மக்கள் அதிகமாக மாதா கோயிலுக்கு வரும்போது இந்தக் கடைகளில் அதிக அளவு கூட்டம் காணப்படுகிறது.
10-அடி மெயின் ரோட்டில் இரண்டு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை கடை முன்பு விட்டு செல்கிறார்கள். இதனால் பழைய துறைமுகத்திற்கு செல்லும் லாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் இல்லத்திற்கு செல்லும் வழியும் இதுதான் எனவே இதனால் விபத்து நடப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் இதுவரை கடை உரிமையாளர்கள் மாநகராட்சியில் எந்த அனுமதியும் பெறவில்லை எனவே ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாணவர்களை 100 சதவீதம் உயர்கல்வியில் இணைக்க வேண்டும்: ஆட்சியர் க.இளம்பகவத் அறிவுறுத்தல்!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 5:20:11 PM (IST)

ஏப்.4ல் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் இளம்பகவத் அறிவிப்பு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 4:55:09 PM (IST)

பணி ஓய்வு பெற்ற காவல்துறையினருக்கு எஸ்பி ஆல்பர்ட் ஜான் வாழ்த்து!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 4:26:36 PM (IST)

மத்திய அரசின் தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர்கள் நியமனம்
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 3:52:57 PM (IST)

காவல்துறை சார்பில் நாளை குறைதீர்க்கும் நாள் கூட்டம்
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 3:33:15 PM (IST)

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி : ஆட்சியர் தகவல்
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 3:21:59 PM (IST)

மாதா கோவில் பகுதி மக்கள்Mar 29, 2025 - 02:44:33 PM | Posted IP 162.1*****