» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மீன்களின் விலை கடும் உயர்வு: அலைமோதிய மக்கள் கூட்டம்!!!
சனி 25, மே 2024 7:52:02 PM (IST)
![](http://media.tutyonline.net/assets/2024_Part_02/fishcrowdtuty.jpg)
தூத்துக்குடியில் நாட்டுப் படகுகள் கடலுக்குச் செல்லாத காரணத்தினால் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் கடல் பகுதியில் பலத்த காற்று வீச கூடும் என்பதால் நாட்டுப் படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க மீன்வளத்துறை வருகிற 27ஆம் தேதி வரை தடை விதித்துள்ளது இதன் காரணமாக நாட்டு படகு மற்றும் பைபர் படகுகள் மீன்பிடி துறைமுகங்களில் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 23ஆம் தேதிக்கு முன்பாக ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு சென்ற படகுகள் இன்று கரை திரும்பின. ஆனால் கடல் பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக தங்கு கடலுக்கு சென்று விட்டு வந்த நாட்டுப்படகுகளில் குறைவான மீன்களே இருந்ததால் மீன்பிடி துறைமுகத்திற்கு மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டது.
இன்று சனிக்கிழமை மற்றும் விடுமுறை தினம் என்பதால் மீன்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டதால் மீன்களின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து காணப்பட்டது. சீலா மீன் ஒரு கிலோ 1500 முதல் 2000 ரூபாய் வரையும், விளைமீன் கிலோ 700 முதல் 750 ரூபாய் வரையும், ஊளி மீன் கிலோ 700 ரூபாய் வரையும், பாறை கிலோ 700 ரூபாய் வரையும், குருவளை கிலோ 350 ரூபாய் வரையும், சாலை ஒரு கூடை நேற்று 5,500 ருபாய் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 6 ஆயிரம் ரூபாய் வரையும் விற்பனையானது.
![](http://media.tutyonline.net/assets/2024_Part_02/fishcrowd.jpg)
மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்ட நிலையிலும் மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டதால் மீனவர்கள் கவலை அடைந்தனர். வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் முடிவுக்கு வந்த பின்பு நாட்டுப்படகுகள் கடலுக்குச் சென்ற பின்பு இந்த மீன் விலை குறையும் என மீனவர்கள் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/jailprisonarrest_1722055476.jpg)
தூத்துக்குடி மாவட்டத்தில் 107பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
சனி 27, ஜூலை 2024 10:13:04 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/onlinejobarrest_1722055105.jpg)
ஆன்லைன் ஜாப் என்று கூறி ரூ.55 லட்சம் மோசடி : குஜராத்தைச் சேர்ந்த 2பேர் கைது!
சனி 27, ஜூலை 2024 10:07:01 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/spbalajisaravanantuty_1705923879_1722054668.jpg)
பனிமய மாதா திருவிழா: 10 இடங்களில் வாகன நிறுத்தம் - எஸ்பி தகவல்!
சனி 27, ஜூலை 2024 10:01:18 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/images (1)_1722010798.jpg)
தூத்துக்குடி நடு கடலில் படகு கவிழ்ந்தது : 7 மீனவர்கள் உயிருடன் மீட்பு
வெள்ளி 26, ஜூலை 2024 9:48:19 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/busstandroad_1721995183.jpg)
பஸ் நிலையம் அருகே ஆபத்தான சாலை : வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்!
வெள்ளி 26, ஜூலை 2024 5:29:03 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/dgpaward_1721986992.jpg)
தென்மண்டல அளவில் சிறந்த காவல் நிலையமாக தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையம் தேர்வு
வெள்ளி 26, ஜூலை 2024 3:08:37 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/rally43i34i5u_1721986502.jpg)