» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
வியாழன் 25, ஏப்ரல் 2024 10:37:19 AM (IST)
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பிரையன்ட் நகர் மேற்கு குருவிமேடு பகுதியில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பிரையன்ட் நகர் மேற்கு குருவிமேடு பகுதியில் புதிய குடிநீர் இணைப்பு, புதிய ரோடு, மின் இணைப்பு, அங்கன்வாடி மையம் போன்ற வசதிகள் செய்து தருமாறு அப்பகுதி மக்கள் மேயருக்கு கோரிக்கை விடுத்தனர. இதனையடுத்து அந்தப் பகுதியை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு செய்து குடிநீர், சாலை வசதி, மின்சார இணைப்பு வழங்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது, திமுக கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், வட்ட செயலாளர் சரவணன், மாமன்ற உறுப்பினர் சரவணன், முன்னாள் வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான இசக்கிமுத்து, முன்னாள் மாநகர விவசாய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், வட்ட துணை செயலாளர் கணேசன், வட்ட பிரதிநிதி ஹரி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
ஹீ ஹீApr 25, 2024 - 07:07:18 PM | Posted IP 172.7*****
இவரு எல்லாம் சும்மா ..
செ.கைத்தான் கோமஸ்Apr 25, 2024 - 06:26:00 PM | Posted IP 172.7*****
ஐயா எங்கள் பகுதி தூத்துக்குடி நகர பகுதி SPG Koil Street ல் வசிக்கிறேன்.
மழை காலத்தில் வீட்டினுள்ளேயும் வீட்டை சுற்றியும் தொடர்ந்து நீர் தேங்கி அவதிப்பட்டு வருகிறோம்.
தயவு செய்து எங்கள் பிரச்சனையை ஆராய்ந்து தேவையானதை மாநகராட்சி செய்து தர வேண்டி கேட்டு கொள்கிறேன்.
Thoothukudi karanApr 27, 2024 - 02:04:58 AM | Posted IP 172.7*****