» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம்

சனி 4, மே 2024 3:10:20 PM (IST)



கோவில்பட்டியில் ஜேசிஐ சார்பில் சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் கடைபிடிக்கப்பட்டது.

தியாகம் செய்து மக்களை காப்பாற்றும் கடமையை செய்யும் தீயணைப்பு வீரர்களை ஊக்குவிப்பதற்காகவும்,சமூகத்துக்காக தங்களின் இன்னுயிரை தியாகம் செய்த தீயணைப்பு வீரர்களை நினைவு கூறுவதற்கும் நாடு முழுவதும் மே 4 ஆம் தேதி சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கோவில்பட்டியில் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை நிலைய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஜேசிஐ தலைவர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். 

பாரதியார் அறக்கட்டளை தலைவர் முத்து முருகன், ஜேசிஐ முன்னாள் செயலாளர் சூர்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜேசிஐ முன்னாள் தலைவர் ஆசியாபார்ம்ஸ் பாபு கலந்துகொண்டு தீயணைப்பு வீரர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலர் சுந்தர்ராஜ் ஏற்புரை வழங்கினார். இதில் ஜேசிஐ உறுப்பினர் ரோஜர் அப்ரின்,  தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வீரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory