» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் தொடர்பான பதிவு வெளியிட கூடாது : ஆட்சியர் எச்சரிக்கை!

புதன் 17, ஏப்ரல் 2024 3:31:56 PM (IST)

இன்று மாலை 6 மணிக்கு பின்னர் வாட்சப் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் தேர்தல் தொடர்பான எந்த ஒரு பதிவும் பதிவிடக் கூடாது என்று தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், "இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு முழுவதும் வருகின்ற 19.04.2024 அன்று பாராளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதைத் தொடர்ந்து,   தேர்தல் நடத்தை விதிகளின்படி வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ஆம் தேதி காலை 07 மணி முதல் ஜூன் 1ஆம் தேதி மாலை 6.30 மணி வரை பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் இறுதி தேர்தல் கருத்துக்கணிப்பு குறித்து வெளியிட முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. 

இதனை பத்திரிகை, தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் சமூக வலைதள பக்கத்தின் உரிமையாளர்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும். மேலும் இன்று(17.04.2024) மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரைகள் நிறைவடைவதைத் தொடர்ந்து, அதன்பின்னர் தேர்தல் தொடர்பான எந்த ஒரு பதிவும் வாட்சப் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் பதிவிடக் கூடாது. மேற்குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கோ. லட்சுமிபதி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் பலி..!

செவ்வாய் 30, ஏப்ரல் 2024 11:00:51 AM (IST)

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory