» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் முக்கிய பிரமுகரை கொல்ல சதி: ஆயுதங்களுடன் திரிந்த 6 பேர் கைது

செவ்வாய் 30, ஏப்ரல் 2024 12:07:33 PM (IST)



தூத்துக்குடியில் முக்கிய பிரமுகரை கொல்வதற்காக அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் திரிந்த கூலிப்படையைச் சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியில் மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் வடபாகம் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் சப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் மட்டக்கடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக 3 இருசக்கர வாகனத்தில் சுற்றி திரிந்த 6 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அவர்கள் விருதுநகர் மாவட்டம் கம்பம்பட்டி தெருவை சேர்ந்த குணசேகரன் மகன் விஜய் என்ற கருப்பசாமி (23), சந்திரசேகரன் மகன் முத்தழகு என்ற அருள்(30), விருதுநகர் கஸ்தூரிபாய் நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சந்தனபாண்டி (21), விருதுநகர் ரோசன்பட்டி அரண்மனை தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் சக்திவேல் (25), அம்பேத்கர் நகரை சேர்ந்த மாரியப்பன் மகன் வல்லரசு (25), தூத்துக்குடி தாளமுத்துநகர் கோமாஸ்புரம் ராஜீவ்காந்தி குடியிருப்பை சேர்ந்த ஜெயராஜ் மகன் ராஜா (38) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இவர்கள் மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ளனர். இவர்கள் கூலிப்படையாக செயல்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் முக்கிய பிரமுகரை கொல்ல சதி திட்டத்துடன் சுற்றித்திரிந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிந்து 6 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் 2 வாள், 2 அரிவாள், கத்தி  போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

முன்னதாக இவர்கள் 6பேரும், தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே போல்பேட்டையில் உள்ள பாரில் பார் ஊழியரான காசிராஜன் என்பவரிடம் தகராறு செய்துள்ளனர். இது தொடர்பாக புகாரின் பேரில் போலீசார் மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடியில் முக்கிய பிரமுகரை கொல்ல ஆயுதங்களுடன் திரிந்த 6 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

Arunமே 1, 2024 - 03:41:28 PM | Posted IP 162.1*****

Yaru da antha nakkiya pramugar

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory