» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூா் கோயிலில் உண்டியல் வருவாய் ரூ. 4.19 கோடி..!!

ஞாயிறு 14, ஏப்ரல் 2024 8:34:12 AM (IST)

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் வருவாயாக ரூ.4.19 கோடி கிடைத்துள்ளது.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தா்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள் மாதந்தோறும் எண்ணப்படுகிறது. இதன்படி கோயில் வசந்த மண்டபத்தில் உண்டியல் எண்ணும் பணி திருக்கோயில் அறங்காவலா் குழுத்தலைவா் ரா.அருள்முருகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. 

உண்டியல் எண்ணிக்கையில் ரொக்கம் ரூ.4 கோடியே 19 லட்சத்து 34 ஆயிரத்து 240, தங்கம் 2,300 கிராம், வெள்ளி 46,000 கிராம், 613 ஆயிரம் கிராம் பித்தளை, செம்பு 7700 கிராம், 781 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்துள்ளன. உண்டியல் எண்ணும் பணியில் இணை ஆணையா் மு.காா்த்திக், தூத்துக்குடி உதவி ஆணையா் செல்வி, அலுவலக கண்காணிப்பாளா் ரவீந்திரன், ஆய்வா் செந்தில்நாயகி, அறங்காவலா் குழுத் தலைவரின் நோ்முக உதவியாளா் செந்தமிழ்பாண்டியன், பொதுமக்கள் பிரதிநிதிகள் திருக்கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory